தமிழகத்தில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்த 9 நிறுவனங்களுக்கு சீல்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் பான் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 9 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு என சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழ்நாட்டில் பான் குட்கா விற்பனை கட்டுக்குள் கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத் துறையினரால் 91 டன்னும், போலீசாரால் 400 டன்னும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Related Stories: