எஸ்ஐ மீது தாக்குதல்: வாலிபருக்கு வலை

உத்திரமேரூர்: சாலவாக்கம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றுபவர் சந்திரசேகர். நேற்று முன்தினம் இரவு எஸ்ஐ சந்திரசேகர், எடமச்சி கிராமத்தில் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்குள்ள அரசு நடுநிலை பள்ளி அருகே வாகனத்தில் தீவிர ரோந்து சென்றபோது, ஒரு வாலிபர் சந்தேகப்படும்படி நின்றிருந்தார். அவரை, எஸ்ஐ சந்திரசேகர் அழைத்தார்.

உடனே அந்த வாலிபர், சாலையில் கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து, எஸ்ஐயின் தலையில் பலமாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் படுகாயமடைந்த எஸ்ஐ சந்திரசேகரன் அலறி துடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின்படி சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: