சென்னை: மதக்கலவரங்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என விசிக எம்.எல்.ஏ.ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். நாகப்பட்டினத்தில் புத்த சிலைகள், தொல் பொருட்கள் கொண்டு தனி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் விசிக எம்.எல்.ஏ.ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை விடுத்தார்.