சென்னை: நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியை சேர்ந்த புதிய நிர்வாகிகள், முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.2019ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் இருந்த நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதையடுத்து இதில் போட்டியிட்ட பாக்யராஜ் அணியை நாசர் அணியினர் வென்றனர். தேர்தலில் வெற்றிபெற்ற பாண்டவர் அணியை சேர்ந்த தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, கோவை சரளா, லதா உள்ளிட்ட வெற்றி பெற்ற நிர்வாகிகள் முதல்வரை தலைமை செயலகத்தில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.