விருதுநகர் இளம்பெண் பலாத்காரம் மேலும் பல பெண்களுக்கு டார்ச்சரா? கைதானவர்களிடம் தீவிர விசாரணை: மதுரை சரக டிஐஜி பொன்னி தகவல்

விருதுநகர்: இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் கைதானவர்கள் மேலும் பல பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனரா என விசாரணை நடந்து வருவதாக மதுரை சரக டிஐஜி பொன்னி தெரிவித்துள்ளார்.விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை, மேலத்தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (27) திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து நண்பர்கள் மாடசாமி, ஜூனத் உட்பட பலருக்கு அனுப்பினார். அவர்களும் அப்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பெண் அளித்த புகாரின்பேரில், விருதுநகர் ரூரல் போலீசார் விசாரணை செய்தனர். இதில் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைக்காக விருதுநகர் எஸ்பி அலுவலகத்திற்கு வந்த மதுரை சரக டிஐஜி பொன்னி அளித்த பேட்டி:பாதிக்கப்பட்ட இளம்பெண் சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். கைதானவர்கள் இதுபோன்று பிறருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்களா என விசாரணை நடந்து வருகிறது. பாலியல் தொந்தரவு குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் 181 என்ற  இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தீவிர விசாரணைக்கு எடுத்துக்  கொள்ளப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: