விருதுநகர்: இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் கைதானவர்கள் மேலும் பல பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனரா என விசாரணை நடந்து வருவதாக மதுரை சரக டிஐஜி பொன்னி தெரிவித்துள்ளார்.விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை, மேலத்தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (27) திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து நண்பர்கள் மாடசாமி, ஜூனத் உட்பட பலருக்கு அனுப்பினார். அவர்களும் அப்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பெண் அளித்த புகாரின்பேரில், விருதுநகர் ரூரல் போலீசார் விசாரணை செய்தனர். இதில் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.