தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (22.3.2022) தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் - தலைவர் திரு. நாசர், பொதுச் செயலாளர் திரு. விஷால், பொருளாளர் திரு. கார்த்தி, துணைத் தலைவர் திரு. பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் திரு. சரவணன், திரு. மனோபாலா, திரு. தளபதி தினேஷ், திரு. காளிமுத்து, திரு. வாசுதேவன், திரு. அஜய்ரத்தினம், திரு. ஜெரால்டு, திருமதி லலிதாகுமாரி, திரு. ஹேமச்சந்திரன், திருமதி சோனியா, செல்வி கோவை சரளா, திருமதி லதா, திரு. ஸ்ரீமன், திரு. சவுந்தர், வழக்கறிஞர் திரு. கிருஷ்ணன், பொது மேலாளர் திரு. பாலமுருகன் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். இந்த நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடனிருந்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது:

நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் புதியதாக பொறுப்பேற்று இருக்கும் ,  மிகப்பெரிய வெற்றியோடு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறோம். நடிகர் சங்க தேர்தல் வரலாற்றை பற்றி முதல்வர் எங்களிடம் கேட்டார். அரசு தரப்பில் என்னென்ன உதவிகள் செய்து தர முடியுமோ, அதை செய்து தருவதாகவும் தெரிவித்தார். தேர்தல் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பை தந்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்தோம். மேலும், பாதியில் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் நடிகர் சங்க கட்டிடத்தை முடிப்பதே எங்களுடைய கோரிக்கையாக முன்வைத்தோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: