நடிகர் ஆனார் முன்னாள் டிஜிபி ஜாங்கிட்

சென்னை: முன்னாள் டிஜிபி ஜாங்கிட் நடிகராக அறிமுகம் ஆகிறார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ஜாங்கிட், தமிழக டிஜிபியாக இருந்தவர். பல வழக்குகளில் இவரது பணி பாராட்டுக்குரிய வகையில் அமைந்தது. குற்றவாளிகளை பிடிப்பதில் அதிக கவனம் செலுத்தி, குற்றங்களை தடுப்பதிலும் முனைப்பாக செயல்பட்டவர். பவாரியா கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்ததில் இவர் திறம்பட செயல்பட்டார். இந்த வழக்கு மூலம் தேசிய அளவில் ஜாங்கிட் பிரபலமானார். இந்த சம்பவத்தின் பின்னணியில்தான் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் உருவாக்கப்பட்டது. இப்போது ஜாங்கிட் நடிகராக களம் இறங்குகிறார். விஜய் சேதுபதி திரைக்கதை, வசனம் எழுதியுள்ள படம் குலசாமி. இதில் விமல் ஹீரோ. தன்யா ஹோப் ஹீரோயின். நகைச்சுவை நடிகர் ஷரவண ஷக்தி இயக்குகிறார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாகவே நடித்துள்ளார் ஜாங்கிட். குலசாமி படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதை தனது சமூக வலைத்தளத்தில் ஜாங்கிட் பகிர்ந்து, படத்தில் நடிப்பது குறித்தும் தெரிவித்துள்ளார்.

Related Stories: