பொன்னேரி: மீஞ்சூரில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வட காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் உள்ள காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 8ம் தேதி விநாயகர் பெருமான் சிறப்பு பூஜையுடன் விமரிசையாக தொடங்கியது. தினமும் காலை, மாலை, இரவில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன.