டெல்லி: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபாமா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனவே பிரதமர் நரேந்திர மோடி ஒபாமா விரைவில் குணமடைய அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.