அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா: விரைவில் குணமடைய மோடி ட்வீட்

டெல்லி: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபாமா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனவே பிரதமர் நரேந்திர மோடி ஒபாமா விரைவில் குணமடைய அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீங்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வருவதற்கும் உங்கள் குடும்பத்தின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என மோடி அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.65 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories: