தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணும் தேதி அறிவிப்பு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஜூன் 23ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கம் சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. இதற்கிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது. இந்த வழக்கு 2 ஆண்டு களுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும், பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ண வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வரும் 20ம் தேதி ஞாயிறு அன்று நடக்கிறது. சென்னை நுங்கம்பாக்கம் குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும், தேர்தல் முடிவு அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது அவரது முகவர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்ற இடத்துக்கு

அனுமதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: