திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். காலையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு விழாவில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்றனர். வெற்றிபெற்ற காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு சைக்கிள், பீரோ, கட்டில், எல்இடி டிவி மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.