கடம்பத்தூர் திமுக பிரமுகர் இல்ல திருமண விழா: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மோ.ரமேஷ் - ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி ரமேஷ் ஆகியோர் மகன் எம்.ஆர்.மதன் என்பவருக்கும், ஆர்.ஆஞ்சநேயலு - ஆ.கெஜலட்சுமி ஆகியோரது மகள் ஆ.தீக்‌ஷிதா என்பவருக்கும் வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை வகிக்கித்தார். எம்எல்ஏ க்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, திருத்தணி எஸ்.சந்திரன், இ.பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருமண விழாவில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு மணமக்களை  வாழ்த்தினார். இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ,  டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, மாநில நிர்வாகிகள் துறைமுகம் காஜா, இ.ஏ.பி.சிவாஜி, ப.ரங்கநாதன், சி.எச்.சேகர், ஜெ.மூர்த்தி, ஆர்.டி.இ.ஆதிசேஷன், ஓ.ஏ.நாகலிங்கம், சி.ஜெரால்டு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, துணைத் தலைவர் டி.தேசிங்கு, மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிட பக்தன், எஸ்.கே.ஆடம், காயத்ரி ஸ்ரீதரன், எம்.கோதண்டம், சரஸ்வதி சந்திரசேகர், ப.சிட்டிபாபு, எம்.பன்னீர்செல்வம், ஐ.சந்திரசேகர், வி.சி.ஆர்.குமாரன், பொன்.பாண்டியன், வி.ஜெ.உமாமகேஸ்வரன், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் என்.இ.கே.மூர்த்தி, கே.அரிகிருஷ்ணன், எஸ்.மகாலிங்கம், கூளுர் எம்.ராஜேந்திரன், சி.சு.ரவிச்சந்திரன், தி.வை.ரவி, ஆர்த்தி ரவி, வி.வினோத்குமார் மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முடிவில் ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் ஆர்.மனோஜ் நன்றிகூறினார்.

Related Stories: