ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே, போலி பீடிக்கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக டூவீலரில் வந்து தப்பி ஓடியவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பிரபல பீடி நிறுவனங்களின் பெயர்களில், போலி பீடிக்கட்டுகளை தயாரித்து விற்பதாக, தனியார் பீடி கம்பெனி மேலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், 4 தனியார் பீடி கம்பெனிகளைச் சேர்ந்த மேலாளர்கள் பழனிவேல் முருகன், கார்த்திக், சங்கர், அவினாஷ் ஆகியோர், ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியப்பபிள்ளைபட்டி கிராமத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் பீடிக்கட்டுகளுடன் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.