சென்னை: உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷியா அதிபர் புதினுக்கு கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா பயங்கர ஆயுதங்களை கொண்டு நாட்டையே சர்வநாசமாக்கி வருகிறது. 14 நாட்களாக நடந்த போரில் பல இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால், பதுங்கு குழிகளில் மக்கள் உயிர் பிழைக்க போராடி வருகின்றனர். பல்வேறு நகரங்களில் உணவு, குடிநீர், மருந்து இல்லாமலும் தப்பிச் செல்லவும் முடியாமலும் மக்கள் தவிக்கின்றனர். மனிதாபிமான அடிப்படையில் ரஷிய போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் இந்த நகரங்களில் வசித்த 20 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளான போலாந்து,ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.