சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளி பரிதாப பலி

சாத்தூர்: சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேல ஒட்டம்பட்டி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த பிரம்மன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று மாலை பட்டாசு உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. அங்கு பணிபுரிந்த அமீர்பாளையத்தை சேர்ந்த கணேசன் (20) இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும் அங்கு பணிபுரிந்த அமீர்பாளையத்தைச் சேர்ந்த ராமர் (19) பலத்த தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: