மும்பை : பங்குச் சந்தை முறைகேட்டு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராம் கிருஷ்ணாவை கைது செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் 2003ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணா. அப்போது இமயமலை சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சாமியார் கூறியதாக ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை வியூக அதிகாரியாக நியமிக்கப்பட்டதும் சர்ச்சையை கிளப்பியது.