மாணவிகளிடம் சில்மிஷம் போக்சோவில் ஆசிரியர் கைது

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 43 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் பொதட்டூர்பேட்டை சேர்ந்த  ஜெயகோபி(46) என்ற ஆசிரியர் 3ம் வகுப்பு படித்து வரும் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அவர்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

 இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் கிராம மக்களுடன் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆசிரியரை அடித்து உதைத்துள்ளனர். தகவலின்பேரில் பள்ளிக்கு விரைந்து வந்த உதவி காவல் ஆய்வாளர்  கண்ணையா மற்றும் போலீசார் பொதுமக்களிடமிருந்து ஆசிரியரை காப்பாற்றி காவல் நிலையத்திற்கு  அழைத்து சென்று விசாரணை செய்தனர்.இந்நிலையில், பொதுமக்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த  போலீசார் சைக்கோ ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: