ரஷ்யாவில் சாம்சங், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்துவதாக அறிவிப்பு

சுவோன்சி: சாம்சங், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் விற்பனையை நிறுத்தியுள்ளன. உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அதனை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என சாம்சங் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் தங்களின் விற்பனை மற்றும் சேவையை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதே சமயம் உக்ரைனில் இணையத்தள பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உறுதியளித்துள்ளது. apple, sony, google, intel, universal, bmw, honda, ford உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தியுள்ளது.

Related Stories: