திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு, தீவிர வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது தாய், சிறுமியை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, பரிசோதித்த டாக்டர், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், மகளிடம் இதுபற்றி விசாரித்தபோது, திருவொற்றியூர் வடக்கு மாட வீதியை சேர்ந்த ராஜசேகரன் (48) என்பவர், தன்னை வீட்டின் மாடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினாள்.