மதிமுக சார்பில் மாநகராட்சி துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பட்டியல் வெளியீடு: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக சார்பில் மாநகராட்சி துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர்களின் பட்டியலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு எஸ்.சூரியகுமார், செங்கல்பட்டு மாவட்டம், நகராட்சி தலைவர் பதவிக்கு மாங்காடு சுமதி முருகன், நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கே.ஏ.எம் குணா (எ) குணசேகரன், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஆர்.எஸ்.ரமேஷ், கரூர் மாவட்டம், குளித்தலை கே.கணேசன், பேரூராட்சி தலைவர் பதவிக்கு தென்காசி மாவட்டம், திருவேங்கடம் த.பாலமுருகன், தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை ரா.சரவணன், ஈரோடு மாவட்டம், சென்னசமுத்திரம் கு.பத்மா, பேரூராட்சி துணைத் தலைவர் திண்டுக்கல் மாவட்டம், பாளையம் வி.லதா, ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை லோ.சோமசுந்தரம், ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ச.துளசிமணி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: