உடுமலை: காலில் காயமடைந்து அமராவதி வனத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம் பண்ணப்பட்டி, கோம்பை வனப்பகுதியில் காலில் காயமடைந்து நடக்க முடியாமல் சிறுத்தை ஒன்று அவதிப்பட்டு வந்தது. தகவல் அறிந்து அமராவதி வனச்சரகத்தில் இருந்து சென்ற வேட்டைத்தடுப்பு காவலர்கள் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். பின்னர் கூண்டில் அடைத்து திருப்பூர் மாவட்டம் அமராவதி விடுதிக்கு கொண்டு வந்தனர்.