சென்னை: 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோரை அழைத்து விழுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சிறார்கள் வாகனங்களை ஓட்டுவதை தடுக்க பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சீருடையில் மாணவர்கள் வாகனம் ஓட்டினால் பள்ளிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.