சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குநராக இருந்த டிஜிபி கரன் சின்கா நேற்று ஓய்வு பெற்றார். அதைதொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் புதிய இயக்குநராக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக விஜிலென்ஸ் டிஜிபியாக இருந்த பிரஜ் கிஷோர் ரவி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ளார்.