பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு சூசம்பாடி பகுதியில் வசித்துவருபவர் கூலித்தொழிலாளி முகமது. இவர் மாடுகள் வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது இரண்டு பசு மாடுகள் அருகே உள்ள தேயிலைத்தோட்டம் பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்று திரும்பி வராததால் நேற்று மாடுகளை தேடி அருகே உள்ள தேயிலைத்தோட்டம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இரண்டு பசுமாடுகளையும் மர்ம விலங்குகள் தாக்கி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.