பதாங்: இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு, பெரியளவில் பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இந்த நாட்டில் உள்ள சுமத்ரா தீவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பதாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நடுக்கத்தினால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் காரணமாக அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசரமாக கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 புள்ளிகளாக பதிவாகி உள்ளது.