கூடலூர் : கம்பம்மெட்டு அருகே தெருநாய் இறந்ததற்கு அப்பகுதி மக்கள் பிளக்ஸ் வைத்து அஞ்சலி செலுத்தி தங்கள் அன்பை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம், கம்பம்மெட்டு அருகே சாந்தன்பாறை தொட்டிக்கானம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் சிறு குட்டியாக வந்த தெருநாய் ஒன்றுக்கு அப்பகுதி மக்கள் ‘ஜிம்மி’ என பெயரிட்டு உணவளித்து வளர்த்து வந்தனர். இதனால் ஜிம்மி வேறு எங்கும் செல்லாமல் அப்பகுதியை காவல் காத்து வந்தது.