திருவாரூர்: திருவாரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மளிகைக் கடைக்காரர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நடவடிக்கை கோரி மறியலில் ஈடுபட்டனர். குடவாசல் அருகே உள்ள கூந்தலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன். மளிகை கடை நடத்திவரும் இவர், கும்பகோணத்தில் பொருட்களை வாங்கி கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிய போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.