தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பட்டாசு ஆலையில் வழக்கம் போல் இன்று வேலையாட்கள் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறி கட்டடம் முழுவதுமாக தரைமட்டமானது. இச்சம்பவத்தில், கொட்டாம்பட்டியை சேர்ந்த ராமர், ஜெயராஜ், தங்கவேல், கண்ணன் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.