சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி, 12வது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சூரியபாரதியை காஞ்சிபுரம் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதோடு, பொய் வழக்கும் புனைந்துள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய ஜனநாயக விரோத வன்முறை தாக்குதலை மார்க்சிஸ்ட் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் அனைத்து கட்சி வேட்பாளர்களிடம் தேர்தல் விதிமுறைகளை விளக்கிக் கொண்டிருந்த போது சந்தேகம் எழுப்பிய சிபிஐஎம் வேட்பாளர் சூரிய பாரதியை காஞ்சிபுரம் நகர ஏ.டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் காவல் படையுடன் சூழ்ந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.