பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன், பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்து பேசியது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்படும் பிரசாந்த் கிஷோர், கடந்த 2015ம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்து தேர்தலில் வெற்றி பெற வைத்தார். தேர்தல் முடிந்த பின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து, கட்சியின் துணைத் தலைவரானார். பின்னர், கட்சியின் தலைவரும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார்.