சென்னை: சென்னை திருவான்மியூரில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் திருவான்மியூர் அருகே பல கி.மீ. தூரம் தேங்கி நிற்கின்றன. திடீரென ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.