கோலாலம்பூர்: சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல் பெரும் குற்றமாக கருதப்படுகிறது. 15 கிராம் ஹெராயினுடன் சிக்கினாலே மரண தண்டனை நிச்சயம். இதுபோன்ற வழக்கில் பல மலேசிய, சிங்கப்பூர் தமிழர்கள் சிக்கி, மரணத்தை எதிர்நோக்கி உள்ளனர். மலேசிய தமிழரான பவுசி ஜெப்ரிடின், சிங்கப்பூர் தமிழரான ரோஸ்லன் பாகர் ஆகியோர், சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் 2010ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்ற நாள் குறித்த போதெல்லாம், பலமுறை இவர்களின் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இருவரும் மனநிலை குறைபாடு உள்ளவர்கள் என அவர்களின் வழக்கறிஞர்கள் கூறி வருவதே இதற்கு காரணம்.