தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் தாம்பரம் நகர முன்னாள் துணைத் தலைவர் காமராஜ் வார்டு முழுவதும் உள்ள பொதுமக்களை வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து, மலர்கள் தூவி, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.அந்த வகையில் 49வது வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களை அவர் நேற்று நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குசேகரித்தார். தாம்பரம் முத்துரங்கம் பூங்கா கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பூங்காவில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பூங்காவை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.