ஆலந்தூர்: ஆலந்தூர் மண்டலம் 166வது வார்டு திமுக வேட்பாளர் என்.சந்திரன் மற்றும் 167வது வார்டு திமுக வேட்பாளர் துர்காதேவி நடராஜன் ஆகியோரை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி நேற்று நங்கநல்லூர், பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்தார்.அப்போது, அவர் பேசுகையில், `திமுக வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது. முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றி தந்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை ₹1000 உங்களை வந்தடைய உள்ளது. இலவச பஸ் பயணம், வங்கிக் கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு அறிவிப்புகளால் முதல்வர் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் பலதிட்டங்கள் உங்களை சேர்ந்தடைய உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்’ என்றார்.