ஆலந்தூர்: பெருங்குடி மண்டலம் 186வது வார்டு திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் புழுதிவாக்கம் சித்தேரி, ஏரிக்கரை, ஷீலா நகர், சீனிவாசன் நகர், அகத்தியர் தெரு, ராமலிங்கம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் `தமிழக முதல்வரின் அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன். பேருந்து வசதி இல்லாத பகுதிகளுக்கு மினி பேருந்து இயக்கமுயற்சி மேற்கொள்வேன். புழுதிவாக்கத்தில் மகப்பேறு மருத்துவமனை அமைத்து தருவேன். தரமான சாலை வசதி, குடிநீர் வசதி நிறைவேற்றி தருவேன்’ என வாக்குறுதி அளித்தார்.