உலகம் ஆப்பிரிக்க நாடான புர்கினோ ஃபாஸோவில் பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல்!: கிராமத்திற்குள் புகுந்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 160 பேர் கொன்று குவிப்பு..!! Jun 07, 2021 புர்கினா பாசோ சொல்ஹான் தின மலர் சோல்ஹன்: ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினோ ஃபாஸோவில் கிராமத்திற்குள் புகுந்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 160 பேரை பயங்கரவாதிகள் கொடூரமாக கொன்று குவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புர்கினோ ஃபாஸோவின் வடக்கு பகுதியில் யாஹா மாகாணம் சோல்ஹன் நகரில் உள்ள ஒரு கிராமத்திற்குள் மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இறங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டும், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் வெட்டியும் கடும் தாக்குதல் நடத்தினர். இந்த கொலைவெறி தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 160 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இதுகுறித்து அங்குள்ள மக்களில் ஒருவர் தெரிவித்ததாவது, கோவிட் – 19 நோய் தொற்றுக்கு மருந்து உள்ளது. அதனை குணப்படுத்த முடியும். ஆனால், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை எப்படி சமாளிப்பது? பயங்கரவாதத்திற்கு எந்தவொரு மருந்தும் இல்லை. இந்த தாக்குதலில் பல்வேறு மக்கள் இறந்திருப்பது வேதனை அளிக்கிறது. தினந்தோறும் பயந்து வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலால் புர்கினோ ஃபாஸோ மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் தற்போது வரை பொறுப்பேற்கவில்லை. ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. … The post ஆப்பிரிக்க நாடான புர்கினோ ஃபாஸோவில் பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல்!: கிராமத்திற்குள் புகுந்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 160 பேர் கொன்று குவிப்பு..!! appeared first on Dinakaran.
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேச்சு
ஈரானில் 8 மாதமாக சிறையில் தவிக்கும் இந்திய கப்பல் பணியாளர்கள் 40 பேரை விடுவிக்க கோரிக்கை: ஒன்றிய அமைச்சர் நேரில் வலியுறுத்தல்
வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க கடும் எதிர்ப்பு.. ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே மோதல்..!!
விலை உயர்வை கண்டித்து பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக 4வது நாளாக தொடரும் போராட்டம்..!!
பெண்கள், சிவப்பு வண்ண உதட்டுச்சாயம் பூசினால் அபராதம்: வடகொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் விநோத அறிவிப்பு