சிங்கப்பூர் அமைச்சராக இந்திய வம்சாவளி நியமனம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டின் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் நாளை பதவியேற்க உள்ள நிலையில் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பெயர்களை நேற்று அறிவித்தார். அதில்,வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக இருக்கும் கன் யாம் யோங் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் முந்தைய அமைச்சரவையில் துணை அமைச்சர்களாக இருந்த பலருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அமைச்சர்களாக உள்ள விவியன் பாலகிருஷ்ணன்,கே.சண்முகம், இந்திராணி ராஜா ஆகியோர் புதிய அமைச்சரவையிலும் தொடர்வார்கள் என லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

The post சிங்கப்பூர் அமைச்சராக இந்திய வம்சாவளி நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: