உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் (35). சிவகாசியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் மேல் மாடியில் ஆட்களை வைத்து சட்டவிரோதமாக பட்டாசுகளுடன், விசேஷ வீடுகளுக்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகளையும் தயாரித்துள்ளார். நேற்று காலை 11 மணியளவில் மாற்றுத்திறனாளியான செக்கானூரணியை சேர்ந்த அஜித் (27) பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் மாடி இடிந்து விழுந்தது. இதில் அஜித் உடல் சிதறி பலியானார். கீழ் வீட்டில் குடியிருந்த விபிதா (22), இவரது 6 மாத குழந்தை ஹர்ஷிதா இருவரும் பலத்த காயமடைந்தனர்.