சென்னை: மூத்த புகைப்படக் பத்திரிகையாளர் குமார் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளது. தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார் என்ற தகவல் நம் நெஞ்சில் பேரிடியாக விழுந்தது என்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் தெரிவித்திருக்கிறது. உழைப்பால் படிப்படியாக உயர்ந்து யுஎன்ஐ செய்தி நிறுவன சென்னை கிளை தலைமை நிர்வாகி பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டவர். சக பத்திரிகையாளர்களிடம் அன்போடு பழகும் தன்மை கொண்டவர், அவரது மறைவு ஈடு செய்ய இயலாத ஒன்று. பத்திரிகையாளர் குமாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.