186வது வார்டு புழுதிவாக்கம் பகுதியில் சாலை, குடிநீர் வசதி நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் உறுதி

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் 186வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் வார்டு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று புழுதிவாக்கம் சிவபிரகாசம் நகர், சீனிவாச நகர், கங்கை தெரு, காவேரி தெரு, யமுனா தெரு, ராமர் கோயில் தெரு போன்ற பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், ‘‘தமிழக முதல்வரின் அனைத்து திட்டங்களும் உங்கள் பகுதிக்கு கொண்டு வருவேன்.

பேருந்து வசதி இல்லாத பகுதிகளுக்கு மினி பஸ் சேவை, தரமான சாலை, குடிநீர், தெருவிளக்கு, வடிகால் வசதி போன்றவற்றை நிறைவேற்றி தருவேன்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது, 186வது வட்ட திமுக பொறுப்பாளர் குமாரசாமி, வழக்கறிஞர் கமலநாதன், முன்னாள் கவுன்சிலர் புனிதன் ஜனார்த்தனன், ராமமூர்த்தி, லட்சுமணன், சுப.சரவணன், கோட்டீஸ்வரன், மகேஸ்வரன், குபேரா, யோகராஜன், ஆர்.மணிகண்டன், ரகுபதி, பி.எம்.தினேஷ், மதுசூதனன், ரமேஷ், முரளி, பாண்டு, எம்.சம்பத்குமார், பி.விஜயகுமார், மகளிரணி சங்கீதா, வசுமதி, சுபஸ்ரீ, கலா, வனிதா, காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் லோகநாதன், வட்ட தலைவர் பி.குமார், மாவட்ட பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: