புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் கடந்த 2019ம் ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி ஸ்ரீநகருக்கு சிஆர்பிஎப் வீரர்கள் பயணம் செய்த பஸ்கள் மீது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். நாட்டையே உலுக்கிய இத்தாக்குதலில் 40 வீரர்கள் பலியாயினர். ஜம்மு காஷ்மீர் போலீஸ் கூடுதல் டிஜிபி.யாக இருக்கும் தானேஷ் ராணா, இந்த தாக்குதல் குறித்து புத்தகம் எழுதி உள்ளார்.அதில், தாக்குதல் சதி திட்டம், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள், சாட்சியங்கள் குறித்து விளக்கி உள்ளார். அவர் தனது புத்தகத்தில், ‘சம்பவத்தன்று காலை விடிந்தும் சிஆர்பிஎப் படை வீரர்கள் வாகனங்களில் புறப்பட்டனர். வழக்கத்துக்கு மாறாக 79 வாகனங்கள் அணிவகுத்து ஒன்றன் பின் ஒன்றாக சென்றன.