பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு நேற்று வியாசர்பாடி சாமியார் மடம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
அப்போது வேட்பாளர் டில்லிபாபு பொதுமக்களிடம் கூறுகையில், ‘‘இங்குள்ள சாமியார் மடம் கோயில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. மேலும், கோயில் குளத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மாசடைந்து வருகிறது. இதை சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.