உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து 17வது வார்டில் என்னை வெற்றி பெற செய்யுங்கள்: மலர்விழிகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி 17வது வார்டு பொதுமக்களிடம் திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூறி, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என முன்னாள் நகர்மன்ற தலைவர் மலர்விழிகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.மதுராந்தகம் நகராட்சி 17வது வார்டில் திமுக சார்பில் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் நகரமன்ற தலைவர் மலர்விழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, முருகன் கோயில் தெரு, வடராயன் தெரு, தேரடி தெரு ஆகிய பகுதிகளில் நேற்று காலை அப்பகுதி பெண்களுடன் சேர்ந்து ஊர்வலமாக சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரித்தார்.

அப்போது மலர்விழிகுமார்,  அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா நிவாரண நிதி ₹4 ஆயிரம், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயிர் காக்கும் திட்டம் உள்பட திமுகவின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டு பொதுமக்களிடம் எடுத்து கூறினார். மேலும், திமுகவின் சாதனை ஆட்சியின் திட்டங்கள் உங்களுக்கு மேலும் கிடைத்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, என்னை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டு கொண்டார்.

தொடர்ந்து நேற்று மாலை மதுராந்தகம் நகராட்சி 2வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரும் மதுராந்தகம் திமுக நகர செயலாளருமான கே.குமாரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு செல்லியம்மன் கோயில் தெரு, ஜிஎஸ்டி சாலை, பஸ் நிலையம், வெங்கடேஸ்வரா நகர் ஆகிய பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆகியயோரிடம் குடிநீர், தெருவிளக்கு சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறி வாக்கு சேகரித்தார்.

Related Stories: