ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 165வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் நேற்று ஆதம்பாக்கம், புவனேஷ்வரி நகர், சரஸ்வதி நகர், ராகவன் நகர், ஆண்டாள் நகர், ரயில்வே காலனி, காஸ் குடோன் தெரு போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், ‘‘கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்தால், இந்த பகுதியில் சுகாதாரம் மற்றும் குடிநீர் பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். சரஸ்வதி நகர் பெருங்குடி மண்டலத்தில் இருந்து தற்போது ஆலந்தூர் மண்டலத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன். இப்பகுதி மக்்கள் வேளச்சேரி சாலைக்கு செல்ல பாலம் அமைத்து தருவேன். பாதாள சாக்கடை, கால்வாய் இணப்புகளை சீரமைத்து தருவேன்,’’ என்றார்.