புதுடெல்லி: போதை பொருட்களுடன் இந்திய எல்லைக்குள் பறந்து வந்த பாகிஸ்தான் ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர். பஞ்சாப் - பாகிஸ்தான் எல்லையில் குர்தாஸ்பூர் செக்டாரின் பஞ்ச்கிரைன் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானில் இருந்து ஒரு ட்ரோன் பறந்து வந்தது. இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்கு பலத்த சத்தத்துடன் ட்ரோன் பறந்து வருவதை பார்த்த எல்லை பாதுகாப்பு படையினர் ட்ரோனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.