திருவொற்றியூர்: மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி 6ம்தேதி ராஜகோபுர ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நேற்று காலை 6 மணிக்கு பால் பணிவிடை, உகபடிப்பு மதியம் பணிவிடை உச்சிபடிப்புடன் விழா துவங்கியது. முக்கிய நிகழ்வான பால் அன்னம் பொங்கலிடும் நிகழ்ச்சி மாலை நடந்தது. இனிப்பு உப்பு இல்லாமல் பச்சரிசி, பாசிப் பயறு, தேங்காய் துண்டுகள், ஐந்து காய்ந்த மிளகாய் போன்ற பொருட்கள் கொண்டு, இப்பொங்கல் தயாரிக்கப்படும்.