குன்னூர் : குன்னூரில் ஹெலிகாப்டர் பைலட்களுக்கு நேற்று பயிற்சி நடந்தது.நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பன்சத்திரம் கிராமத்தில் கடந்த டிசம்பர் 8ம் தேதி ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஹெலிகாப்டரின் பாகங்கள் எடுக்கும்போது ஒரு முறை மட்டும் இந்த பகுதியில் ஹெலிகாப்டர் இயக்கப்பட்டது.