புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தே ஹாதுல் முஸ்லிம் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இக்கட்சியின் தலைவரும், மக்களவை எம்பி.யுமான அசாதுதீன் ஓவைசி, தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார்.
பின்னர், டெல்லிக்கு திரும்பிக் கொண்டு இருந்தபோது காசியாபாத் தேசிய நெடுஞ்சாலையில் அவருடைய கார் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இந்நிலையில், ஓவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால் தனக்கு உயிர் மீது பயமில்லை. இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்ைல என்று ஒவைசி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.