தமிழகத்தில் நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்டோர் தற்கொலை: மக்களவையில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேச்சு

டெல்லி: தமிழகத்தில் நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்டோர் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மக்களவையில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நீட் பாடத்திட்டத்தில் உள்ள பெரும்பாலான கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஏற்றப்பட்டு 5 மாதங்களாகிறது. கடந்த 5 மாதமாக ஆளுநர் புதிய மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: