மூணாறு: மூணாறில் உள்ள முதிரைப்புழை ஆற்றில் குப்பைகள், கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு நகரம், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. இந்த நகருக்கு, தினசரி ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். நல்ல தண்ணி ஆறு, கன்னிமலை ஆறு, குண்டலை ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம்தான் மூணாறு நகராகும். கடல் மட்டத்திலிருந்து 1,600 அடி உயரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில், நகரில் உள்ள முதிரைப்புழை ஆற்றின் இருபுறமும் பொதுமக்களின் குடியிருப்புகள் உள்ளன. நகரின் இதயம் என இந்த ஆறு அழைக்கப்படுகிறது. முன்பு ஆற்றில் தெளிந்த நீர் ஓடி ரம்மியமாக இருக்கும்.